Friday, February 23, 2007

விஜயகாந்த் மனு தள்ளுபடி

விஜயகாந்த் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி ஷா, இந்த வழக்கில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், இழப்பீட்டிற்கான நஷ்டஈடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் மண்டபத்தை ஒப்படைக்க 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

that's tamil (தமிழில்)

4 comments:

  1. மேல் முறையீடு செய்து மேலும் தாமதப்'படுத்துவாரா'?

    ReplyDelete
  2. பாபா

    என்னைக் கேட்டால், விஜயகாந்த் நீதிமன்றம் செல்லாமல் மக்கள் மன்றம் சென்றிருந்தால் Political Mileage கிடைத்திருக்கும்.

    பொதுவாக இது போன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் ஜெயிப்பதில்லை. இழப்பீடு அதிகம் பெறலாம். அவ்வளவே.

    அரசாங்கத்திற்கு தேவை என்றால் அதுவும் முக்கியமான் விசயம் என்றால் நிச்சயம் வழக்கு நமக்கு சாதகமாக இருக்காது.

    விஜயகாந்திற்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியிருக்க ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்பது எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
  3. பாபா இப்போது தள்ளுபடியானது மேல்முறையீட்டு மனுவே. ஒரு மாதத்திற்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. பார்ப்போம் மக்கள் ரட்சகர் என்ன செய்கிறார் என்று.

    ReplyDelete
  4. முத்து... செய்தி முழுதாகப் பார்க்காததால் கவனிக்கவில்லை. நன்றி!

    ---மக்கள் ரட்சகர் என்ன செய்கிறார் ---

    அடுத்து என்ன... ஒப்பாரி படலம்தான்

    ReplyDelete