Monday, March 26, 2007

சற்றுமுன்: கட்டுனாயக்க இராணுவ விமானத்தளத்தில் வான்புலிகள் தாக்குதல்

மார்ச் 26, 2007 - இன்று அதிகாலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பிரிவு, கொழும்புக்கு அருகில் அமைந்த கட்டுனாயக்க இராணுவ விமாளத்தளத்தின் மீது வான் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியது. இது வான்புலிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள முதல் அதிகாரப்பூர்வத் தாக்குதலாகும். இதனால், வான்புலிகள் அமைப்பு இருப்பது உறுதிப்படுகிறது. இதில் இருவர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்த இரண்டு இலகு ரக விமானங்களை வான்புலிகள் பயன்படுத்தி உள்ளனர். இலங்கை விமானப் படையின் தாக்குதல் திறத்தை குறைப்பதற்காக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

மேலும் அறிய -

TimesNow.tv

2 comments:

  1. 3 SLAF HAD DIED 17 INJURED.

    NO CIVILIANS ARE TARGETTED...AND SATRU MUN IS ROMBA NERATHTHUKKU MUN

    YOU NEED SOMEONE TO UPDATE FROM HOME DUDE

    SATHIYA

    ReplyDelete
  2. ஒரு நேரடி சாட்சியின் நேர்முகம் - BBC News

    ReplyDelete