Tuesday, March 20, 2007

துபாயில் தீவிபத்து


துபாய் ஷேக் ஸயத் சாலை வானுயர் கட்டிடங்கள் நிறைந்த பகுதி. அங்கு வளர்ந்துவரும் கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. 29 தளம் கொண்ட இந்தக் கட்டிடத்தில் எவ்வாறு தீவிபத்து நிகழ்ந்ததென்று உடனடியான தகவல்கள் ஏதும் இல்லையென்றபோதும், ஆரம்ப அறிக்கைகளில் இந்த விபத்தில் எவ்ருக்கும் உயிர்ச்சேதம் இல்லையென்பது ஆறுதல் தரும் செய்தி. தீவிபத்து காலை அமீரக நேரம் 9 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டபோதும், பரபரப்பான காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக துபாய் நகரின் போக்குவரத்து பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.

1 comment:

  1. தங்களுடைய வலைப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது. வளர வாழ்த்துகிறோம்.
    அன்புடன்,
    இஸ்லாமிக் நியூஸ்.

    www.islamicnews.wordpress.com

    ReplyDelete