சென்னை, ஏப்ரல் 5
போலி முத்திரைத்தாள் புழக்கத்திற்கு முடிவுகட்ட கணினியின் வாயிலாக முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்தி பத்திரங்களை பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது!
தமிழக சட்டப் பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முத்திரைத்தாள் வாயிலாக கிடைக்கக்கூடிய வருவாயை தடையின்றி கிட்டச் செய்ய கணினி முத்திரைத்தாள் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
போலி முத்திரைத்தாள் புழக்கத்தினால் மாநில அரசின் பொருளாதாரத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்றும், இதனை அறவே கட்டுப்படுத்த இப்புதிய முறையை அரசு அறிமுகம் செய்யப் போகிறது என்றும் பன்னீர்செல்வம் கூறினார். (யு.என்.ஐ.)
"வெப் உலகம்"
Great! It is really a good move!
ReplyDelete