சென்னையை சேர்ந்தவர் திருமூர்த்தி பூமையா. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுகாக முன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டலில் இருந்து அமெரிக்காவின் பிலடெல்பியாவுக்கு சென்றார். அப்போது இவர் விமானப் பணிப் பெண்களிடம் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் பிலடெல்பியாவில் தரையிறங்கயதும் போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது விமானப் பணிப் பெண்களிடம் ரகளை செய்ததாகவும், ஊழியர்களை தாக்கியதாகவும், வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் பிலடெல்பியா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 69 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தட்ஸ் தமிழ்
நல்லா வேணும்யா இவருக்கு
ReplyDeleteபெரிய "ரவுடி"யா இருப்பாரோ?
ReplyDeleteபயத்துடன்
சத்யா
இன்னா பெரிசா தப்பு பண்ணிட்டார்? நம்ம சிவாஜி சார் வசந்தமாளிகையில செய்யாத தப்பா? போங்க பாலா, "கண்ணிணால பெண்ணை ஒருவன் திருட நினைக்கிற" உலகிலதானே நாங்க இருக்கிறோம். உங்க முகத்தில பால் வடியிறது என்னமோ உண்மைதானப்பா. ஆனா உங்க திருட்டு விழி இருக்கே
ReplyDeleteபிளேன்ல சும்மாவா இருந்திருக்கும்?
புள்ளிராஜா