மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு இருவர் இறந்த நிகழ்வைக் குறித்து மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் மே 11ல் நடக்கவுள்ள கொண்டாட்டங்களை ரத்து செய்யவும் கேட்டுள்ளார்.
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி கருத்துக் கணிப்பு நடத்திய 'ஜென்மங்கள்' என்னிடம் வரட்டும் தமிழகம் முழுவதும் அழைத்துச் சென்று எனக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது காட்டுகிறேன் என சவால் விடுத்துள்ளார்.
Karunanidhi upset over Dinakaran office attack
தினமலர்
இது தொடர்பான எனது பதிவு
ReplyDeleteகருணாநிதி இப்பொழுது வருத்தப்பட்டு என்ன பயன்? முதலிலேயே சிந்தித்திருக்க வேண்டும். பணமும் அதிகாரமும் குவிந்திருக்கும் இடத்தில் உட்கட்சி ஜனநாயகத்தை வளரவிடாமல் மகன்களையும் மருமக்களையும் வளரவிட்டு வாரிசு அரசியலாக்கிவிட்டு இப்பொழுது எரிகிறதே வலிக்கிறதே என்றால்? இதில் அடுத்த கட்சியைப் பற்றிக் கிண்டல் வேறு! வார்த்தைஜாலம் மக்களை மட்டுமே ஏமாற்றும் என்பதை இப்பொழுதாவது உணர்ந்தால் சரி. இவர்கள் பிரச்சனையில் இறந்தது அப்பாவிகள். ஆனால் பாவிகள் மட்டும் இன்னும் உருண்டையாக.
ReplyDelete