அசோமில் உல்பா தீவிரவாதிகள் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒரு குழந்தை உட்பட மூவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேற்கு அசோமின் பாங்கைகான் மாவட்டத்தில் உள்ள பக்லதான் பஜாரில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்து, நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைக் காலமான அசோமில் உல்பா திவீரவாதிகளின் வன்முறை மீண்டும் தலைதூக்கி உள்ளது. கடந்த வெள்ளியன்று கவுஹாத்தி பேன்ஸி பஜாரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.
MSN Tamil
அஸ்ஸாம் போலிஸ்:
ReplyDeleteஎன்னாடா இங்கேயும் குண்டு வச்சிட்டானுங்களா யாருன்னா ஒரு பாய்யே புடிச்சி உள்ளே போடுங்க ஏன்னா அப்பத்தான் நம்ம டிபார்ட்மென்ட்க்கு நல்ல பேரு கிடைக்கும் சீக்கிரம் கைது பன்னிட்டோம்ன்னு...
இது தான் இன்றைய நிலைமை....