2006-ம் ஆண்டுக்கான "அறம்' விருது, திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். இளங்கோவுக்கு (47) வழங்கப்படுகிறது. இவர், குத்தம்பாக்கம் கிராமத் தன்னாட்சி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதுடன், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் அடங்கும்.
வேதிப்பொறியியலில் பட்டம் பெற்ற இளங்கோ, விஞ்ஞானி பணியை விட்டுவிட்டு கிராமச் சேவையில் ஈடுபடத் தொடங்கினார். குத்தம்பாக்கம் ஊராட்சித் தலைவராக இருந்த காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டார். தற்போது, தொடர்ந்து அப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இளங்கோவுக்கு விருதுத் தொகை ரூ. 1 லட்சத்துடன், மேலும் ரூ. 1 லட்சம் மானியமாக அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை அவரின் 'வலைய வளர்ச்சிப் பொருளாதாரம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்த உதவும். மேலும், வட்டியில்லாமல் ரூ. 2 லட்சம் கடனுதவி அளிக்கப்படுகிறது என்று கூறினர்.
Dinamani
எண்ணங்கள்: ஏழைமையைக் குறைத்தல் V
ReplyDeleteஅவரின் புகைப்படம்...
ReplyDeleteநல்லது நடக்குதுங்கோ: செய்து முடித்தவன்
இளங்கோவுக்கு வாழ்த்துகள்
ReplyDelete