Thursday, June 7, 2007

இடஒதுக்கீடுக்கு விஜயகாந்த எதிர்ப்பு

ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கிடுக்கு விஜயகாந்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திக்கு "THE HINDU.."

8 comments:

  1. தெளிவா சொல்லிவிட்டார். நன்றி

    ReplyDelete
  2. Headline News - Maalai Malar

    கேள்வி:- இடஒதுக்கீடு பிரச்சினையில் உங்கள் கருத்து என்ன?

    பதில்:- எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருந்த போது ஏழைகள் உயர வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டார். ஏழைகளின் குழந்தைகள் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு நுழைவு தேர்வு முறையை கொண்டு வந்தார். ஆனால் இப்போது இட ஒதுக்கீடு என்ற முறையில் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. எந்த ஜாதியினராக இருந்தாலும் அதில் உள்ள ஏழை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

    தற்போது இட ஒதுக்கீட்டை வசதி படைத்தவர்களே பயன்படுத்தி கொள்கிறார்கள்.

    ReplyDelete
  3. BaBa,

    //DMDK not for caste-based reservation in education //

    பத்திரிக்கைகள் குழுப்புகின்றனவா? எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
  4. இட ஒதுக்கீடு என்றால் என்னவென்று புரியாத தனது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    எல்லோருக்கும் நல்லவராக இருக்க நினைத்து, தன்னை இவ்வாறு அனைத்து பிரச்னைகளிலும் குழப்பிக் கொள்வது நல்லதல்ல என்று பண்ருட்டி ராமச்சந்திரனாவது அவருக்கு ஒரு வகுப்பு எடுக்கலாம்.

    இட ஒதுக்கீட்டிற்கும், நுழைவுத் தேர்விற்கும், ஏழ்மைக்கும் என்ன சம்பந்தம்?

    இலங்கைப் பிரச்னைக்கு தங்களது தீர்வு என்ன என்று கேட்டுப் பாருங்கள்...இதே போல பதில் வரும்.

    ReplyDelete
  5. மொத்தத்தில் தேர்ந்த அரசியல்வாதி ஆயிட்டார்னு சொல்லுங்க ;)

    ReplyDelete
  6. //Boston Bala said...
    மொத்தத்தில் தேர்ந்த அரசியல்வாதி ஆயிட்டார்னு சொல்லுங்க ;)
    //

    பாலா,
    சும்மா வெறுமனவே அரசியல்வாதின்னு சொல்லப்படாது "தேசிய" அரசியல் வாதி ஆகிவிட்டார்.
    :)

    ReplyDelete
  7. ஐயோ! தலையில அடிச்சுகலாம்..என்ன பேசுறோம்னே தெரியல்ல இந்த ஆளுக்கு .ஒத்தை ஆளா போய் பாகிஸ்தான் தீவிரவாதிகள அழிக்கிற சினிமா-ன்னு நெனச்சு பேசிட்டிருக்கார் .

    ReplyDelete
  8. மிகச்சரியாக சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.
    இட ஒதுக்கீட்டை யார் எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்பதைவிட
    இட ஒதுக்கீட்டை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்.. ஓட்டுப்போடும் ஏழை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற நாடியை பிடித்திருக்கிறார் விஜயகாந்த்

    இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கு வாக்குமழை கொட்டினால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

    ReplyDelete