மஹேந்திர சிங் தோனி என்கிற அந்த அதிரடி ஆட்டக்காரர் இனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளுக்கான துணைத்தலைவராகவும் உயர்த்தப்பட்டுள்ளார். தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்கசர்க்கார் அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள 15 பேர் அணி விபரங்களை வெளியிட்ட போது இதைத் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர மட்டையாளர் டெண்டுல்கர் ஐந்துநாள் ஆட்டங்களின் துணைத்தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
15 பேர் கொண்ட அணியில், திறன் குறைந்து காணப்படும் ஷேவாக், ஹர்பஜனுடன், காயமடைந்துள்ள பந்துவீச்சாளர் முனாஃப் பட்டேலும் விலக்கப்பட்டுள்ளார். உடல் தகுதி திறன் மீட்டிய ஜாஹீர்கான் இருவகை ஆட்டங்களிலும் பந்துவீச்சைத் தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. அஜித் அகர்கரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த அணியின் ஒற்றைப் புதுமுகமாக மும்பையின் ரோஹித் ஷர்மா உள்ளார்.
தொடர்ந்து படிக்க..
//அஜித் அகர்கரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்//
ReplyDeleteaiyo pavam evanga thirunthave matanunga. "mafia" Tendulkar romba than powerful pola.. Tendulkar ku Agarkar enna "unda pirava sagotharara?"