கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் நிர்வாக அறங்காவல் சரத் சந்திரன் வெளியிட்ட செய்தி:
கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் இரண்டாண்டுக்கொரு முறை இந்தியாவில் வெளியாகும் சிறந்த நாவலுக்கு ரொக்கப் பரிசை 'ரங்கம்மாள் பரிசு' என்ற பெயரில் வழங்கி வருகிறது. 2005, 2006-ம் ஆண்டுகளில் வெளியான 23 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்தன. அவற்றில் நீலபத்மநாபன் எழுதிய 'இலை உதிர் காலம்' என்ற நாவல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் நீலபத்மநாபனுக்கு பரிசுத்தொகையாக ரூ.15 ஆயிரமும், நாவலை வெளியிட்ட வானதி பதிப்பகத்தினருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. 'இலை உதிர் காலம்' நாவல் முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ளது.
தினமணி
அறிமுகம்... Amudhasurabi >> June06 :: நூல் மதிப்புரை - Sify.com
ReplyDelete