.

Saturday, July 21, 2007

அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டு தாமதம் - பிரசவத்தில் பெண் பலி

திருப்பத்தூர், ஜுலை.21-

திருப்பத்தூரை அடுத்த வெள்ளகுட்டை, நன்னேரியை சேர்ந்தவர் ஆறுமுகம் (30) கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (26). இவருக்கு நேற்று பிரவச வலி ஏற்பட்டது. முதல் பிரசவம் என்பதால் அவசரமாக ஆலங்காயத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஆபரேசன் செய்து பிரசவம் பார்க்க வேண்டும் எனவே திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து மாலை 4 மணிக்கு லட்சுமியை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சேர்க்கை சீட்டு பிரவச சீட்டு என்று அங்கு இங்குமாக அலைக்கழித்தாக கூறப்படுகிறது.

பின்னர் ஒருவழியாக சித்ரா என்ற பெண்ணிடம் ரூ.500 லஞ்சமாக கொடுத்தாராம். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு லட்சுமிக்கு ஆபரேசன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

லஞ்சம் கேட்டு நேரம் கடத்தாமல் நேற்று மாலையே லட்சுமிக்கு பிரசவம் பார்த்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்று ஆறுமுகம் தனது உறவினர்களிடம் கூறினார்.

இதற்கிடையே லஞ்சம் கேட்டு அலைக்கழித்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க இருப்பதாக ஆறுமுகம் கூறினார். பிரசவத்துக்கு வந்த இடத்தில் லஞ்சத்திற்காக லட்சுமியை இழந்த அவரது உறவினர்கள் அழுது துடித்தது கண்களை கலங்க செய்தது.

மேலும் செய்திக்கு "மாலை மலர்."

1 comment:

சிவபாலன் said...

லஞ்சம் கேட்ட உயிர் பலி செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்!

-o❢o-

b r e a k i n g   n e w s...