இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியைக் கணக்கிட்டு, வரும் 2010 -ஆம் ஆண்டிற்குள் 60 பில்லியன் டாலரை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் தற்போதைய வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால், 75 பில்லியன் டாலரை இலக்காகக் கொள்ளலாம் என்கிறார் நாஸ்காம் தலைவர், கிரண் கார்னிக்.
சமீபத்தில் வெளியான கடந்த வருட (2006) டிசம்பர் மாத புள்ளிவிபர முடிவுகள் இந்த நம்பிக்கையை ஏற்படச் செய்திருக்கின்றன.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு பலமாய் இருப்பதை இம்முடிவுகள் பிரதிபலித்துள்ளன என்று கூறலாம்.
MSN - தமிழ்
No comments:
Post a Comment