தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்கள் தமிழகத்தில் இந்த ஆண்டில் அதிக அளவு முதலீடு செய்ய இருப்பதாகவும், இதனால் நாட்டின் தகவல் தொழில்நுட்ப சந்தையில் தமிழகத்தின் பங்கு 25 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் சந்திரமௌலி, மாநிலம் ஏற்கெனவே மென்பொருள் ஏற்றுமதியில் கடந்த ஆண்டின் இலக்கை கடந்து விட்டதாகவும், இதுவரை 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
MSN - தமிழ்
No comments:
Post a Comment