பாகிஸ்தானின் வட மேற்கே, தெற்கு வசிரிஸ்தானில் உள்ளூர் பூர்வ குடியினருக்கும், வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கும் இடையில் இந்த வாரம் நடந்த மோதல்களில் 160 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மாநிலத்தின் ஆளுனர் இது குறித்துத் தகவல் தரும்போது, கொல்லப்பட்டவர்களில் 130 பேர் உஷ்பெக்கிஸ்தானியர்கள் அல்லது செச்சினியர்கள் என்றும் சுமார் 30 பேர் உள்ளூர் பூர்வ குடிகள் என்றும் கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை வெடித்த இந்தச் சண்டையில் தமது இராணுவத்தினர் சம்பந்தப்படவேயில்லை என்பதை பாகிஸ்தான் அரசு முன்னர் மறுத்திருந்தது.
The Hindu : International : Ceasefire in Waziristan
No comments:
Post a Comment