நாடு முழுவதும் ஞாயிறன்று அதிகாலை முழு அளவிலான சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் சாதாரணமாக பார்க்கலாம்.
இந்த சந்திரகிரகணம் அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி காலை 4.14 மணிக்கு பூரண கிரகணமாகத் தெரியும் என்று கொல்கட்டாவில் பிர்லா கோளரங்க இயக்குனர் டி.பி. துரை தெரிவித்துள்ளார். கொல்கட்டா மக்கள் முழு அளவிலான சந்திர கிரகணத்தை முழுமையாக கண்டு களிக்க முடியும் என்றும், இந்தியாவிலேயே முதலில் இந்த சந்திர கிரகணம் கொல்கட்டாவில் தான் தெரியும் என்றும் அவர் கூறினார்.
இந்த கிரகணம் காலை 5.27 மணி வரை நீடித்து பின்னர் நிறைவடையும் என்றும், அதன் பின்னரே சந்திரன் வெளியே தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MSNதமிழ்
No comments:
Post a Comment