திருவனந்தபுரத்திலிருக்கும் ஆற்றுக்கால் பகவதி கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து கும்பிட்டனர். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு மாசிமகம் அன்று ஒரே நாளில் இலட்சக்கணக்கானவர் வருகை தருவது ஆண்டுதோறும் நிகழும் நிகழ்ச்சியாகும். கோவிலிலிருந்து 5 கி.மீ தூரத்திற்கு கேரளாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் பெண்கள் வரிசையாக அரிசியும் வெல்லமும் கலந்து பொங்கல் பொங்குவது அருமையானக் காட்சியாகும். சென்ற வருடம் அதிகமான பெண்கள் குழுமிய விழாவாக கின்னஸ் சாதனை படைத்தது.
இதுபற்றிய NDTV.com - News
ஆட்டுக்கால் அல்ல நண்பரே ஆற்றுக்கால் பகவதி
ReplyDeleteநன்றி அரவிந்தன் சரி செய்துவிட்டோம்.
ReplyDelete