ரிலையன்ஸ், வால்மார்ட் நிறுவனங் கள் பெருநகரப் பகுதிகளில் தான் கடைகளை அமைக்க முடியும் என்றும், இந்த நிறுவனங்கள் கிராமப் புறங்களுக்கு செல்ல வாய்ப்பு இல்லை.
எனவே, இந்த நிறுவனங்களால் தமிழகத்தில் உள்ள சிறுவியாபாரி களுக்கோ, வணிகர்களுக்கோ பாதிப்பு ஏற்படாது; நகர்ப் பகுதிகளிலும் கூட இவற்றால் மளிகைக்கடைக்காரர்கள், காய்கறி வியாபாரிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.
இந்த நிறுவனங்களின் கடைகளில் சந்தை விலையை விட பொருட்கள் குறைவான விலையில் கிடைப் பதால் பொதுமக்கள் இந்த கடை களை வரவேற்கின்றனர். இதனை உணர்ந்து ரிலையன்ஸ், வால்மார்ட் கடைகளுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் ரவிக்குமார்இந்த கருத்தை தெரிவித்தார்.
மாலைச் சுடர்
No comments:
Post a Comment