ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களில் தாவரவியல் பூங்காவும் ஒன்று. 22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா பார்ப்பதற்கு ரம்யமாக காட்சி அளிக்கும். 2 லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
கண்ணுக்கு குளுமையாக காட்சி அளிக்கும் தாவரவியல் பூங்காவில் அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடைபெறும்.
அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தர முடியாது என்பதால் ஏப்ரல் 1-ந்தேதி முதல் தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜுன் 1-ந்தேதி வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும்.
இதேபோல் ரோஜா பூங்காவிலும் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக் கலைத்துறை அதி காரிகள் அறிவித்துள்ளனர்.
- மாலை மலர்
No comments:
Post a Comment