தொண்டாமுத்தூர், மார்ச் 29-
கோவையை அடுத்த சிறுவாணி அடிவாரம் சாடிவயல்பதி உச்சி மாரியம்மன் கோயில், முள்ளாங்காடு மாரியம்மன் கோயில்களில் பங்குனி மாதத் திருவிழா கொண்டாடப்பட்டது. சீங்கப்பதி, தொட்டப்பதி, வெள்ளப்பதி, சர்க்கார் போரேட்டி, ஜாகீர்போரேட்டி, கல்கொத்திபதி, தானிகண்டி ஆகிய வனக்கிராமங்களை சேர்ந்த மலைவாசிகள் கலந்து கொண்டனர்.
அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தனர்.அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. விழாவையட்டி தினமும் மாலை மலைவாசிகளின் ஆடல், பாடல் நடனம் நடந்தது.
மழை வேண்டியும், உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கவும், உலக ஒற்றுமை வலியுறுத்தியும், வனவிலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் இந்த விழா நடத்தப்படுகிறது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மலைவாசிகள் மஞ்சள் நீராடினர்.
No comments:
Post a Comment