அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.இ மாணவி சேட்னா (20) தற்கொலை தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆர்.ரகுராமனை அண்ணாமலை நகர் போலீஸார் மகளிர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனர்.
விடுதியில் தங்கிப் படித்த சண்டீகரைச் சேர்ந்த பொறியியல் மாணவி சேட்னா கடந்த 26ந் தேதி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு காரணமான விரிவுரையாளரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.
மேலும்
No comments:
Post a Comment