வரும் 2014ம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியை புது டெல்லியில் நடத்த இதுவரை ஆதரவு தெரிவித்து வந்த சீனா, தனது நிலையில் இருந்து பின் வாங்கியுள்ளது. தென் கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த தனது ஆதரவை சீனா தெரிவித்துள்ளது.
கொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட சீன பிரதமர் வென் ஜியாபாவோவை, இன்சியான் நகர மேயர் ஆம்-ஸங்- சூ சந்தித்துப் பேசினார். அப்போது, 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை தங்கள் நாட்டில் நடத்த சீனாவின் ஆதரவைக் கோரினார். இதற்கு பதிலளித்த சீன அதிபர், தாயகம் திரும்பியதும் தென் கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப் போவதாக உறுதி அளித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் புது டெல்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் ஆசிய விளையாட்டு போட்டி நடத்து முயற்சியில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
MSN INDIA
No comments:
Post a Comment