சென்னை, ஏப்.10: நடிகர், இயக்குநர் மற்றும் இசை அமைப்பாளர் டி. ராஜேந்தர் ரூ. 34 லட்சம் கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி திருச்சியைச் சேர்ந்த எஸ்.பி. ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'மோனிஷா என் மோனாலிசா' என்ற திரைப்படத்தை 1998-ல் டி.ராஜேந்தர் தயாரித்தார். இப்படத்துக்காக ரூ.59 லட்சம் நிதி உதவி செய்ததாக தனது மனுவில் கூறியுள்ளார் ராமமூர்த்தி. வாங்கிய கடனில் இன்னும் 34 லட்சம் ரூபாயை டி. ராஜேந்தர் தர வேண்டியிருப்பதாக தனது வழக்கில் அவர் கூறியுள்ளார்.
தற்போது அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை சன் டி.வி.யில் டி. ராஜேந்தர் நடத்துகிறார். இதற்காக அவருக்கு வாரம் ஒரு முறை ரூ.2 லட்சம் சம்பளம் தரப்படுவதாக அறிகிறேன். அத்தொகையில் 75 சதவீதத்தை ஒவ்வொரு வாரமும் எனக்குத் தருமாறு டி. ராஜேந்தருக்கும், சன் டி.வி. நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
- Dinamani
No comments:
Post a Comment