ரஷ்யாவின் கடைகளிலும், சந்தைகளிலும் வெளி நாட்டவர் பணியாற்றுவதைத் தடை செய்யும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் மிகவும் அவசியமானது என்று ரஷ்ய அதிகாரிகள் வாதிட்டிருக்கிறார்கள்.
ரஷ்யர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கைகள் தேவையாக இருந்தன என்று அதிபர் பூட்டின் கூறியுள்ளார். ஆனால், இதனைக் கண்டனம் செய்வோர், அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில், மக்களைக் கவரும் ஒரு நடவடிக்கை இதுவென்று கூறியுள்ளனர்.
ரஷ்ய நடுவண் அரசின் வந்தேறு குடியேற்றப் பிரிவின் துணைத் தலைவர் பேசுகையில், ரஷ்யாவில் சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தச் சட்டம் உதவும் என்றும், ஏற்கனவே குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுக்கு இது பாதுகாப்பு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
BBCTamil
No comments:
Post a Comment