கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிக்காது என்று தெரிகிறது.
அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி யாரை ஆதரிக்கும்; மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அப்பதவிக்கு போட்டியிடுவாரா? என்று பிரகாஷ் காரத்திடம் கேட்கப்பட்டது.
அதற்கு, "கடந்த முறை குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணனை மீண்டும் தேர்வு செய்யலாம் என்று கேட்டபோது, பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. யாரையும் இரண்டாவது முறையாக அப்பதவிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று அக்கட்சியினர் வாதிட்டனர். இப்போது அவர்கள் எந்த வகையில் அதே கருத்தை அணுகப்போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது' என்றார்.
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவடைந்ததும் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது குறித்து கட்சி விவாதித்து முடிவு எடுக்கும் என்றார் காரத்.
அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ஆதரித்தால் மீண்டும் குடியரசுத் தலைவராக கலாம் சம்மதம்?
No comments:
Post a Comment