Thursday, April 12, 2007

சீக்கியர்கள் தொகுப்பாளர் மந்திராபேடி மீது கோபம்


உலகக் கோப்பை தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மந்திரா பேடி ஒரு சீக்கியர். இவரது அண்மைய நிகழ்ச்சியொன்றில் சீக்கியர்களின் புனிதச் சின்னமான 'ஏகம் கர்' (ஒருவனே தேவன்) சொல்லை தனது திறந்த முதுகுப் புறத்தில் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்து கொதித்தெழுந்து விட்டார்கள். சீக்கியர்களின் புனித நூலான கிரந்தசாகிப்பில் முதல் வாக்கியங்கள் அவையாகும். லூதியானா, அமிர்தசரஸ் நகரங்களில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டிருக்கிறது.

இதன் முன்னரும் தனது நாய்களுக்கு, அவற்றை தன் குடும்பத்தினாராக வரித்துக் கொண்டு, சீக்கியப் பெயர்களை சூட்டி சச்சரவில் மாட்டியுள்ளார்.

மேலும்..Mandira Bedi in midst of Sikh religious storm

1 comment:

  1. இந்த மாதிரி செய்திகளை ஃபோட்டோக்களோடு தந்தால் 'சற்று முன்' இதழுக்கு நான் ஆயுள் சந்தா கட்டத் தயார்.
    ஜகன்
    தோஹா, கத்தார்.

    ReplyDelete