ராய்ப்பூர், ஏப்.2 : சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவுன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அந்த தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் தேவ்ராட் சிங், பாஜக வேட்பாளர் லீலாராம் போஜ்வானியைவிட 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜ்நந்தகாவுன் மக்களை தொகுதி பாரதீய ஜனதா வசமிருந்தது. அதை தற்போது காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
No comments:
Post a Comment