உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள இந்த பிரசார சி.டி.க்கள் பாபர் மசூதி, கோத்ரா சம்பவம் போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. வகுப்புவாதத்தை தூண்டிவிடக்கூடிய இந்த சிடிக்கள் மாநிலத்தில் சுமுக நிலை சீர் கெட வழி செய்துள்ளது. தேர்தலில் ஆதாயம் பெற மதவாதம் எனும் விஷத்தை பரப்பும் நோக்கில் இந்த சிடியை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த சி.டி.யை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த சி.டி.யை போட்டுப்பார்த்த பாஜக தலைவர்கள் அதற்கு ஒப்புதலும் அளித்துள்ளனர். ஆனால் தற்போது அவர்கள் மறுக்கின்றனர். இது வெட்கக்கேடான விஷயம். தேர்தலைவிட மிக முக்கியமான விவகாரம் இது.
எனவே பாஜகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் வி.பி.சிங்.
No comments:
Post a Comment