Tuesday, April 10, 2007

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

சேலம் மாவட்டம் ஏற்காடு வசம்பாடியில் உள்ள எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 2 மினி லாரி மற்றும் டாடாசுமோ காரில் 35 பேர் கொண்ட கும்பல் வந்து காவலாளி பழனியை சரமாரியாக அடித்து உதைத்து கட்டிப்போட்ட பின்னர் குடோனில் சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக் கப்பட்டு இருந்த உயர்ரக சந்தன கட்டைகளை2 லாரிகளில் ஏற்றி கடத்தினர்.

தகவல் அறிந்து சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகரன் தலைமையில் இன்ஸ் பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணி, மாவட்ட வன அலுவலர் பாரதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொள்ளை அடிக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகளுடன் வந்த 2 மினி லாரிகளையும் மடக்கினர். அதை பின்தொடர்ந்து வந்தடாடாசுமோ காரையும் சுற்றி வளைத்தனர். கொள்ளை கும்பலை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேர் தப்பி சென்றுவிட்டனர்.

1 comment: