சரித்திரங்கள் கண்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை இன்று தன்னகத்தே கொண்டிருக்கும் மாநிலசட்டசபையின் வரலாற்றில் புதிய சாதனைபடைத்து சரித்திரம் எழுதப்படுவதை கண்டது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஐம்பது ஆண்டுகாலம் சட்டசபையில் பணியாற்றியமையை பாராட்டும் விதமாக நடந்த பொன்விழாவில் ஆளுநர் திரு பர்னாலா அவரின் அவைப் பணி மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்வதை புகழ்ந்துரைத்தார்.எதிர்கட்சிகளான அதிமுகவும் மதிமுகவும் புறக்கணித்த இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள் அவை உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டிருந்தனர்.
ஆளுநரை தவிர பாட்டாளி மக்கள் கட்சியின் ஜிகே மணி, சிபிஎம்மின் கோவிந்தசாமி,சிபிஐயின் சிவபுண்ணியம், மற்றும் டிபிஐ யின் கே செல்வம் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர்.
மேலும்..The Hindu News Update Service
படம் நன்றி; தினமலர் நாளிதழ் இணையப் பதிப்பு
No comments:
Post a Comment