சினிமா டைரக்டர் மணிரத்னத்தின் தம்பி சீனிவாசன், குலுமனாலியில் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டபோது தவறி விழுந்து மரணம் அடைந்தார். அவருடைய உடல் குலுமனாலியில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. டெல்லியில் இருந்து இன்னொரு விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
`கேன்ஸ்' படவிழாவில் கலந்துகொண்டுவிட்டு, ஸ்பெயின் நாட்டுக்கு சென்றிருந்த டைரக்டர் மணிரத்னம் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். தம்பியின் உடலைப்பார்த்து அவர் கண்கலங்கினார்.
மரணம் அடைந்த சீனிவாசன், மணிரத்னத்துடன் இணைந்து `உயிர்,' `அலைபாயுதே,' `இருவர்,' `ஆயுத எழுத்து,' `குரு' உள்பட பல படங்களை தயாரித்தார். அவருடைய உடல் தகனம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 11-30 மணிக்கு, சென்னை பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் நடைப்பெற்றது.
No comments:
Post a Comment