சென்னை, மே 9:ஏழைகளுக்கு இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் குறை இருந்தால், தூக்கு மேடைக்குப் போகத் தயாராக இருக்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.
தொழில் துறை- தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்தது. அப்போது பேசிய டி.ஜெயகுமார் (அதிமுக), இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாகக் கூறினார். இத்திட்டத்துக்காக ரூ.850 கோடி செலவிடப்பட்டிருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அளவுக்கு கலர் டிவிக்கள் விநியோகிக்கப்படவில்லை என்றார் அவர்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.) பேசுகையில், கலர் டிவி திட்டம் திறந்த புத்தகமாக நடக்கிறது என்றார். இதற்காக முதல்வர் தூக்குமேடைக்குப் போக வேண்டும் என்றால், அதிமுக செய்த முறைகேடுகளுக்கு ஆயிரம் முறை தூக்கு மேடைக்குப் போக வேண்டும் என்றார்.
Dinamani
No comments:
Post a Comment