மும்பையின் நாடிகளில் ஒன்றான மேற்கு இரயில்வேயின் தண்டவாளங்களை அதிகரிக்கும் பணிக்காக சனி,ஞாயிறு அன்று உள்ளூர் இரயில்வண்டிகள் 25%க்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மும்பைகாரர்கள் இன்று வெளியே செல்வதையே தவிர்த்தனர். போரிவலி- விரார் இடையே நான்கு தண்டவாளங்களாக்கும் பணி நடைபெறுகிறது. வரவிருக்கும் வசதிக்காக இந்த சங்கடத்தை பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று துணை பொது மேலாளர் விவேக் சஹாய் கூறினார். சில வெளியூர் இரயில்களும் மும்பை சென்ட்ரலிற்கு பதிலாக மும்பை CST யிலிருந்தோ வாசாய் ரோடிலிருந்தோ இயக்கப் படுவதாகக் கூறினார்.
DNA - Mumbai - Mega block: Trains services in Western section affected - Daily News & Analysis
No comments:
Post a Comment