புதுதில்லி, மே 27: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சோசலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சந்திரஜித் யாதவ் (80) வெள்ளிக்கிழமை இரவு தில்லியில் காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த சந்திரஜித் யாதவ், கடந்த 21-ம் தேதி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவரது உடல் வாராணசிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டு, திங்கள்கிழமை நண்பகலில் சொந்த ஊரான அசம்காரில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று யாதவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உ.பி. அரசியலில் நீண்ட காலம் கோலோச்சிய யாதவ், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
Dinamani
No comments:
Post a Comment