எனது கணவர் வெங்கடேச பண்ணையார் சாவு குறித்து கண்டிப்பாக சிபிஐ விசாரணை நடந்தே தீரும். அதற்கான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று பண்ணையாரின் மனைவியும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான ராதிகா செல்வி கூறியுள்ளார். மத்திய உள்துறை இணை அமைச்சராக பெற்றுப்பேற்றுள்ள ராதிகா செல்வி முதல் முறையாக நேற்று நெல்லை வந்தார். அங்கு மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது கணவர் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டது தொடர்பாக நான் சிபிஐ விசாரணை கோரியுள்ளேன். அது கண்டிப்பாக நடந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன்." என்றார்
- தட்ஸ்தமிழ் செய்தி
No comments:
Post a Comment