உத்தர பிரதேச நிர்வாகம் அனில் அம்பானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்த சட்டமீறல்களை சுட்டிக்காட்டி, நடுவண் அரசிடம் தொடர்பு கொண்டுள்ளது. முதல்வர் மாயாவதி பதவியேற்றவுடன் நிகழ்ந்த அதிகாரி மாற்றங்களுக்குப் பிறகு முலாயம் சிங் யாதவின் நண்பர்களின் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார்.
நொய்தாவில் ரிலையன்சுக்கு ஒதுக்கப்பட்ட 1200 ஏக்கர் நிலத்தின் நடுவே சாலை அமைந்திருக்கிறது. இது சுங்கச்சோதனைக்கு இடையூறாக இருக்கும்.
சிங்குர் டாடா போராட்டத்தைப் போலவே உத்தர பிரதேச விவசாயிகளும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தாத்ரி மின் நிலையத் திட்டத்தை எதிர்த்து ஜூலை 2006-இல் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
NDTV.com: Anil Ambani's SEZ plan in trouble
No comments:
Post a Comment