மலையாள மனோரமா பத்திரிகைக்கு 2004-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட உள்ளது.
2004-ம் ஆண்டு கேரளத்தில் கடும் வறட்சி நிலவியது. அப்போது நீர் சேகரிப்பு குறித்து 'பல துளி' என்ற பிரசாரத்தை மாநிலம் முழுவதும் மலையாள மனோரமா பத்திரிகை மேற்கொண்டது. இதை பாராட்டும் விதத்தில்தான் அப் பத்திரிகைக்கு இந்திரா காந்தி பர்யாவரண் (சுற்றுச்சூழல்) விருது மத்திய அரசினால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருது சர்வதேச சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி வழங்கப்படும்.
தினமணி
No comments:
Post a Comment