ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு 11.15 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் நாகர்கோயில் - ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்.2659) ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், காயமடைந்த பயணிகள் விசாகப்பட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் ரயில் வழக்கத்தைவிட மெதுவாகச் சென்றுள்ள போதும், தொழில் நுட்பக் கோளாறால் விபத்து நேர்ந்துள்ளதாக, நேரில் பார்வையிட்ட பின் ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 0891 - 2575083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TamilMSN.com
NDTV.com: Train derails in Visakhapatnam, 3 killed
ReplyDelete