மதுரைஇடைத்தேர்தல்"சற்றுமுன்" நிலவரப்படி 20 சதவீதம் வாக்குப்பதிவு.
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பெரும் பரபரப்புக்கு இடையே இன்று நடக்கிறது. ராணுவம் மற்றும் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்து வரும் இந்த தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 20 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment