அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு 4 பேர் பலி.
அசாம் தலைநகர் கௌகாத்தியில் இன்று காலை உல்பா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அங்குள்ள பரபரப்பான வியாபார பகுதியான மக்கோவாவில் ஒரு மசூதி முன்பு இன்று காலை 7.30 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த மசூதியை ஒட்டி காய்கறி மார்க்கெட் இருப்பதால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மார்வாரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment