சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக, சாலையோர மரங்களை வெட்டக் கூடாது என்று எக்ஸ்னோரா அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி பி. ஜோதிமணி ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர்.
உஸ்மான் சாலையில் மரங்களை வெட்ட மாநகராட்சிக்கு அனுமதி அளித்தனர். ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 50 மரக் கன்றுகளை நட வேண்டும். அவற்றை 5 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
தினமணி
No comments:
Post a Comment