இதுவரை அரசு/காவலர்களுக்கும் குஜ்ஜர்களுக்கும் இருந்த போராட்டம் நேற்று முதல் மீனா இன மக்களுக்கும் குஜ்ஜர் இனமக்களுக்கும் இடையேயான இனப்போராக வெடித்துள்ளது. ஜெய்பூர்-ஆக்ரா சாலைமறியலில் ஈடுபட்டிருக்கும் குஜ்ஜர் இன மக்களை விரட்டியடிக்க மீனா இனமக்கள் இரும்பு தடிகள், கத்திகள் கொண்டு தாக்க அச்சாலை போர்க்களமாக மாறியுள்ளது. லால்சாட் நகரருகே இந்தச் சண்டையால் எட்டு பேர் வரை இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. ST ஒதுக்கீடு பெற போராடும் குஜ்ஜர்கள் தங்கள் பங்கை அபகரிப்பார்கள் என்று அம்மாநிலத்தின் மிகப் பெரும்பான்மை ST யாக உள்ள மீனா இன மக்கள் பயப்படுகின்றனர். குஜ்ஜர்களுக்கு ST ஒதுக்கீடு வாங்கித் தருவதாக சொல்லி சென்ற தேர்தலை வென்ற பிஜேபி தனதி இந்து வாக்குவங்கியில் இருக்கும் சாதி சண்டைகளை சரிவர புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்சினையை பூதாகாரமாக வளரவிட்டு செய்வதறியாமல் திகைக்கிறது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ராஜஸ்தானின் நெடுஞ்சாலைகளும் இரயில் மார்கங்களும் மூடப்பட்டிருக்கின்றன.
தொடர்புள்ள செய்தி: Full-blown caste war in Rajasthan, 8 killed- Hindustan Times
No comments:
Post a Comment