கிரகலட்சுமியுடன் ஏற்பட்ட காதல் பின்னர் நடந்த ரகசிய பதிவுத் திருமணம் குறித்து அவரது முதல் கணவரான நாராயணன் வேணுபிரசாத் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகர் பிரஷாந்த், கிரகலட்சுமி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிரகலட்சுமியின் முதல் கல்யாணம் குறித்த பரபரப்புத் தகவலை பிரஷாந்த் வெளியிட்டபோது அத்தனைபேரும் ஆடிப் போயினர். கிரகலட்சுமியின் முதல் திருமணம் குறித்த பதிவுத் திருமண சான்றிதழுடன் போலீஸில் புகார் கொடுத்தார் பிரஷாந்த். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். அந்த விசாரணையில், பிரஷாந்த் கூறிய புகார்கள் உண்மைதான் என்று தெரிய வந்தது.
No comments:
Post a Comment