சீனாவில் சட்டவிரோதமான சுரங்கங்கள் மற்றும் செங்கற் தொழிற்சாலை ஆகியவற்றில் அடிமைத் தொழிலாளர்களை பயன்படுத்தியதுடன் தொடர்புடைய 160க்கும் அதிகமானவர்களை தாம் தற்போது கைது செய்துள்ளதாக சீனாவின் வட பகுதியில் உள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஆட்தேடலின் போது கைது செய்யப்பட்டவர்களில், சான்சி மாகாணத்தில் உள்ள செங்கற் தொழிற்சாலையில் பணியாற்றிய தலைமை அதிகாரி ஒருவரும் அடங்குவார். அநேகமாக 570 பேர் அடிமைகளாகக் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேர் சிறார்கள். சான்சி மற்றும் அண்டை மாநிலமான ஹெனன் ஆகிய இடங்களில் இவர்கள் விடுவிக்கப்பட்டுளனர்.
இந்த அராஜகங்கள் குறித்து ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளிவந்ததை அடுத்து, அவை குறித்து விசாரிக்குமாறு சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் உத்தரவிட்டிருந்தார்.
- பிபிசி தமிழ்
BBC NEWS | Asia-Pacific | Scores held over Chinese slavery
No comments:
Post a Comment