ஈரானிலிருந்து இந்தியாவிற்கு எரிவாயு கொண்டுவர நடந்த மூன்றுநாடுகள் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எரிவாயுவை பாக். வழியே கொண்டுவருவதற்கான விலையில் உடன்பாடு கண்டுள்ளன; ஈரான் கடைசிநிமிடத்தில் தன் விலைஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கேட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கொருமுறை உலக சந்தை விலைகளின்படி விலையை ஏற்றி/இறக்க ஒரு நிபந்தனையை சேர்க்க ஈரான் விரும்புகிறது. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் 25 வருட ஒப்பந்த காலம் முழுமையும் ஒரு மில்லியன் BTUவிற்கு $4.93 ஆக விலையை மாற்றாமல் வைக்க விரும்புகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நாளையும் தொடரும்.
மேல் விவரங்களுக்கு...The Hindu News Update Service
No comments:
Post a Comment