ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் ஷெகாவத் சுயேச்சையாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க சரத் யாதவ் உறுதியளித்ததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருக்கு சிவசேனை ஆதரவு அளிக்கும் என்று கூட்டணி நம்புவதாகவும் அவை தெரிவித்தன. பிரதிபா பாட்டீல் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிவசேனை அவருக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று கூறப்படும் தகவல்களில் ஆதரமில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்த வாக்குகள் - 11 லட்சம்
காங்கிரஸ் & ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 5,70,000
பிறர்: 4,60,970
பாஜக & தேசிய ஜனநாயகக் கூட்டணி - 3,54,689
மூன்றாவது அணி - 1,06,281
மூன்றாவது அணி வேட்பாளரை அறிவிக்காவிட்டால் பிரதிபா பட்டீல் ஜனாதிபதியாவது உறுதி.
அதிமுக, சமாஜ்வாதி கொண்ட மூன்றாவது அணியினர் தனியாக வேட்பாளரை நிறுத்தினால் விருப்ப வாக்குமுறை நடைக்கு வரும். அதன்படி, தங்களின் முதல் விருப்பம் யார், இரண்டாம விருப்பம் யார் என்று வாக்களிக்க வேண்டும்.
மிகக் குறைந்த வாக்கு வாங்கியவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால், எல்லாருமே இரண்டாவதாக ஒருவரைப் பரிந்துரைப்பதால், வாக்கு எண்ணிக்கை கூட்டலின் இறுதியில் முதலிடம் பெறுபவர் வித்தியாசப்படலாம்.
மூன்றாவது அணி வேட்பாளரை நிறுத்துவதால் பைரான் சிங் ஷெகாவத்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகிறது.
ஷெகாவத் போட்டி உறுதி | NDTV.com: NDA refuses support to Pratibha Patil
நல்ல அலசல். நன்றி
ReplyDelete