இந்தியாவின் தூய்மையான; பசுமையான நகரம் என்று பெயரெடுத்துள்ள சண்டிகரின் மகுடத்தில் மற்றுமொரு மணிமுடியாக அது புகை பிடிக்கா நகரமாக ஜூலை1 முதல் ஆகவுள்ளது.
2003 ஆம் ஆண்டு சட்டத்தீர்மானத்தின் மீது 293 மனுக்களை தகவலறியும் சட்ட உரிமையின் கீழ் தொடுத்த சண்டிகர் மக்கள் இதனைச் சாதித்துள்ளனர். சண்டிகர் பற்றிய மதிப்பு வணிக; சுற்றுலா தளங்களில் உயர இது வழிவகுக்கும்.
பெண்கள், குழந்தைகள், புகை விரும்பாதோர் ஆகியோரை மறைமுக புகையிழுத்தலிலிருந்து காக்கும் வகையில் பொதுஇடங்களில் புகைப்பதை இச்சட்டம் தடைசெய்யும்.
1980களிலும் 90களிலும் துப்பாக்கி முனையில் இம்மாற்றத்தை கொணர முற்பட்ட தீவிரவாதிகள் தோல்வியைத் தழுவியதும், தானாய் ஏற்பட்ட மக்கள் மனமாற்றத்தில் இப்போது இம்மாற்றம் சாத்தியமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
TOI
No comments:
Post a Comment