ஹைதராபாத்தில் காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் மாற்றாக மூன்றாம் அணி அமைப்பதற்கு முன்னோடியாக ஐந்து பிராந்தியக் கட்சிகளின் கூட்டம் இன்று சந்திரபாபு நாயுடு வீட்டில் கூடியது. அ இ அதிமுக தலைவர் ஜெயலலிதா, சமாஜ்வாடிக் கட்சியின் முலாயம்சிங் யாதவ், அசோம் கணபரிஷத் தலைவர் ப்ரிந்தாவன் கோஸ்வாமி, இந்திய தேசிய லோக் தளத்தின் ஓம் பிரகாஷ் சௌதாலா,முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பா,முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் மாராண்டி, மதிமுக தலைவர் வைகோ, மற்றும் கேரள காங்கிரசின் கேஜே தொமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களில் கடைபிடிக்கக் கூடிய வாய்ப்புக்களை விவாதித்தனர்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment