கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த 22-ம் தேதி இரவு நடைபெற்றது. ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்மையாருடன், காரைக்கால் அம்மையார் சிலையை வைத்து பூஜை நடத்திய அர்ச்சகர்கள், உற்சவம் புறப்படும் முன்னர், காரைக்கால் அம்மையார் சிலையை அப்புறப்படுத்தினர்.
இப்பிரச்னை தொடர்பாக, செயல் அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கோயில் உற்சவத்தில் காரைக்கால் அம்மையார் சிலையை அவமதிப்பு செய்த, கோயில் அர்ச்சகர்கள் கே.ஆர். ரத்தினம், பி.ஆர். மணிகண்டன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தினமணி
No comments:
Post a Comment