விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் 'அன்புத்தோழி' படத்தில் விடுதலைப் புலிகளைப் போல சீருடை அணிந்து புரட்சியாளர் வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது.
படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும், இது தேச ஒற்றுமைக்கு எதிரானது என்றும் திருமாவளவன் நடித்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் படக்குழுவினர் அதற்கு மறுக்கவே படத்தை வெளியிட சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. தற்போது மேல்முறையீட்டுக்காக படம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Dinamani.com
No comments:
Post a Comment